Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அழகாபுரியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

அழகாபுரியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

அழகாபுரியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

அழகாபுரியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

ADDED : ஜூலை 13, 2011 10:12 PM


Google News

காரைக்குடி : காரைக்குடி அருகே அழகாபுரியில் புதிதாக 'டாஸ்மாக்' மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுபானத்தை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி அருகே கண்டனூரில் 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்படுகிறது. இக்கடையை அழகாபுரிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்க, லாரி மூலம் மதுபாட்டி பெட்டிகளை அங்குள்ள கடை ஒன்றில் இறக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை அப்பகுதியினர் மதுபானங்களை ரோட்டில் ஊற்றி நூதன போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கடையில் இறக்கிய மதுபான பாட்டில்களை மீண்டும் கண்டனூர் கடைக்கு எடுத்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us