Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் : அரசு ஊழியர்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் : அரசு ஊழியர்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் : அரசு ஊழியர்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் : அரசு ஊழியர்களுக்கு "தடை'

ADDED : அக் 05, 2011 10:30 PM


Google News

சிவகங்கை : ''உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன்,'' என, ஊழியர்களிடம் எழுத்துபூர்வ உறுதிமொழி பெறுகின்றனர்.

தேர்தலில் அரசு ஊழியர்கள் சங்கங்கள், தொழிற்சங்கத்தில் உள்ள ஊழியர் குடும்பங்களின் ஓட்டுக்களை பெற வேட்பாளர் தொழிற்சங்க நிர்வாகிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் சென்றது. இதையடுத்து, எந்த அரசு துறை சார்ந்த ஊழியர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, அந்தந்த துறை உயர் அதிகாரிகள் தொழிற்சங்கத்தில் உள்ள ஊழியர்கள் பிற ஊழியர்கள் என அனைவரிடமும், எந்தவித பிரசாரத்திலும் ஈடுபடமாட்டேன் என்றும், உத்தரவை மீறி பிரசாரத்தில் ஈடுபடுவது தெரிந்தால் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுகிறேன் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர்.

'கிலி': தொழிலாளர்களின் ஓட்டுக்களை பெற தொழிற்சங்கத்தை பயன்படுத்தி, வேட்பாளர்களிடம் 'கவனிப்பை' பெறலாம் என்ற ஆவலில் இருந்த ஊழியர்களுக்கு, தேர்தல் கமிஷனின் தடை உத்தரவு 'கிலி'யை ஏற்படுத்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us