Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் நகராட்சியில் முன்னணி கணிப்பில் இழுபறி : பிரசாரத்திலும் பெரும் விறுவிறுப்பு இல்லை

ராமநாதபுரம் நகராட்சியில் முன்னணி கணிப்பில் இழுபறி : பிரசாரத்திலும் பெரும் விறுவிறுப்பு இல்லை

ராமநாதபுரம் நகராட்சியில் முன்னணி கணிப்பில் இழுபறி : பிரசாரத்திலும் பெரும் விறுவிறுப்பு இல்லை

ராமநாதபுரம் நகராட்சியில் முன்னணி கணிப்பில் இழுபறி : பிரசாரத்திலும் பெரும் விறுவிறுப்பு இல்லை

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகளில் தலைவர் பதவி யாருக்கு என்பதை கணிக்க முடியாத அளவிற்கு பிரசாரம் மந்தகதியில் நடந்து வருகிறது.

ராமநாதபுரம் நகராட்சியில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் சேகர், தி.மு.க., சார்பில் நாகநாதசேதுபதி, காங்.,சார்பில் முத்துராமலிங்கம், பா.ஜ.,சார்பில் கண்ணன், தே.மு.தி.க., சார்பில் முத்தீஸ்வரன், ம.தி.மு.க., சார்பில் சிங்கம் மற்றும் இரண்டு சுயேச்சைகள் என எட்டு பேர் களத்தில் உள்ளனர். இதில் அ.தி.மு.க.,- தி.மு.க.,-காங்.,-பா.ஜ.,-தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரத்திலும் பெரிய கட்சிகள் மட்டும் வார்டு வாரியாக காலை 8 முதல் பகல் 11 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் மக்களை சந்தித்து ஓட்டுகள் சேகரிக்கின்றனர். பிரசாரத்திலும் பெரும் கூட்டத்தையும் காணமுடியாததால் விறுவிறுப்பின்றி உள்ளது. நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் தேக்கம், கொசுத்தொல்லை, போதிய பஸ் வசதி இன்மை, நகராட்சி திட்ட வளர்ச்சிப்பணிகளில் தொய்வு, குளறுபடி என பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் மக்கள் யார் பக்கம் என்பது புரியாமல் அனைத்து வேட்பாளர்களும் தவிக்கின்றனர். இதனால் பட்டப்பகலில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெளிப்படையாக சில இடங்களில் பணம் வழங்கப்படுகிறது. இதுதவிர இரவு நேரங்களிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவர்கள் ஓட்டு போடுவார்களா என்ற சந்தேகத்தில் பல வேட்பாளர்கள் பணத்தை இறைக்கவில்லை. மக்கள் எந்த வேட்பாளருக்கும் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்காததால் யாருக்கு ஆதரவு தர உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் வேட்பாளர்கள் அலைமோதுகின்றனர்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us