/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்: அச்சத்தில் மக்கள்ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்: அச்சத்தில் மக்கள்
ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்: அச்சத்தில் மக்கள்
ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்: அச்சத்தில் மக்கள்
ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்: அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூலை 13, 2011 10:06 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே இறைச்சிகுளம், கள்ளிக்குளம் வழியாக கோவிலாங்குளம் செல்லும் தரைப்பாலம் அருகே ரோடு சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவிலாங்குளம் தரைப்பாலம் வழியாக இறைச்சிகுளம், கள்ளிக்குளம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. 1972 ல் அமைக்கபட்டுள்ள இந்த பாலத்தில் மழை காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது இதை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தற்போது பாலத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் பகுதி விரிசலைந்து உள்ளது. பாலத்தையொட்டி பள்ளம் உள்ளது. இதனால் இது ஒருவழிப்பாதை போல மாறிவிட்டது. கனரக வாகனங்கள் செல்லும் போது பள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. சேதத்தை சீரமைக்க பலமுறை மக்கள் பிரதிநிதிகள், நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.


