ADDED : ஜூலை 13, 2011 10:30 PM
தேனி : தேனி ஆர்.சி.வி.ஏ., நிறுவனம், தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்ளின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில், தொண்டு நிறுவனங்களை தொடங்கி சிறப்பாக நடத்துவது எப்படி, என்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு தேனியில் நடந்தது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். தேனி கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் ராமசாமி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர் சேஷாத்திரி, பெரியகுளம் நேசம் தொண்டு நிறுவன இயக்குனர் முருகன், ஆடிட்டர் ஜெகதீஸ் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


