Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பஜார் பகுதியில் புறக்காவல் நிலையம் தச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை

பஜார் பகுதியில் புறக்காவல் நிலையம் தச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை

பஜார் பகுதியில் புறக்காவல் நிலையம் தச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை

பஜார் பகுதியில் புறக்காவல் நிலையம் தச்சநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 26, 2011 01:39 AM


Google News

திருநெல்வேலி : தச்சநல்லூர் பஜார் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தச்சநல்லூர் பஜார் அருகிலேயே வாடகை கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டுவந்தது.அப்போதுதச்சநல்லூர்,ஊருடையான்குடியிருப்பு,சத்திரம் புதுக்குளம்,கரையிருப்பு,அழகநேரி,சிதம்பரநகர்,வேப்பங்குளம்,மேலக்கரை,கீழக்கரை,பிரான்குளம்,சுந்தராபுரம் போன்ற பகுதிகள் தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.



இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஓராண்டிற்கு முன்புவரை எந்த நேரத்திலும் போலீஸ் ஸ்டேஷனை எளிதாக அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வந்தனர்.காரணம்...

தச்சநல்லூர் பஜார் பகுதியின் அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது தான். ஆனால் தற்போது புகார் கொடுக்க சென்றால்,வேறு ஏதாவது பிரச்னைகளில் மாட்டுக்கொள்வோமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமையன்பட்டி மெயின்ரோட்டின் அருகே போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கு தனது இடத்தை ஒருவர் இலவசமாக கொடுத்தார். அந்த இடத்தில் ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 32 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஸ்டேஷன் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கிவருகிறது.போலீஸ் ஸ்டேஷன் செல்லும் பகுதி சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ள கும்மிருட்டான பகுதி. பல நேரங்களில் அப்பகுதியில் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தச்சநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் புகார் கொடுக்க செல்ல வேண்டுமென்றால் கும்மிருட்டான பகுதியை கடந்து செல்லவேண்டும்.



இதனால் புகார் கொடுக்க செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் இல்லாமல் புகார் கொடுப்பதற்கு வசதியாக தச்சநல்லூர் பஜார் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,''முன்பு தச்சநல்லூர் மெயின் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. இதனால் எந்த இரவிலும் பெண்கள் கூட ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தனர். ஆனால் தற்போது புகார் கொடுக்க வேண்டுமென்றால் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக சென்று புகார் கொடுக்கவும் அச்சமாக உள்ளது. எனவே ராமையன்பட்டியில் ஸ்டேஷன் இருந்தாலும், தச்சநல்லூர் பஜார் பகுதியில் உடனடியாக புறக்காவல் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் இரவு நேரத்தில் மட்டுமாவது செயல்படுதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''என்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us