ADDED : ஆக 03, 2011 12:39 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து நடந்த இரு வெவ்வேறு
விபத்துகளில் டூ வீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டுபேர்
இறந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த சந்திராப்பட்டியைச்
சேர்ந்தவர் குமாரசாமி மகன் முருகையா(32).
இவர் நேற்றுக்காலை வழக்கம் போல்
தனது டி.வி.எஸ்., மொபட்டில் இலுப்பூர் கடைவீதிக்கு சென்றுள்ளார். வீடு
திரும்பும்போது மேலப்பட்டி அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம்
இவர்மீது மோதிவிட்டு நிக்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த
முருகைய்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுபோன்று கீரனூரைச் சேர்ந்தவர்
செந்தில்(30). நேற்று மதியம் இவர் தனது மோட்டார் சைக்கிளில்(ஹீரோ ஹோண்டா)
புதுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்தார். சத்தியமங்கலம் அருகே வந்தபோது எதிரே
வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்மீது மோதிவிட்டு நிக்காமல் சென்றுள்ளது.
இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து
வழக்குப்பதிவு செய்துள்ள அன்னவாசல் போலீஸார், இரு விபத்துகளிலும்
தொடர்புடைய வாகனங்களை தேடிவருகின்றனர்.