ADDED : ஆக 03, 2011 01:42 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்: சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பு.முட்லூர் அருகே பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் உள்ளது பெரியகுட்டி, வெட்டிக்குளம், குத்தாப்பாளையம், மண்டபம், சில்லாங்குப்பம் ஆகிய ஐந்து கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரியகுமட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் அல்லது கடலூருக்கு செல்ல வேண்டியுள்ளது. பெரியகுமட்டியில் அரசு பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 2006ம் ஆண்டு சிதம்பரத்தில் இருந்து கடலூர், கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு பஸ்கள் பெரியகுமட்டியில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றன. தற்போது பெரியகுமட்டியில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. எனவே பெரியகுமட்டி யில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


