Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு

பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு

பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு

பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு

ADDED : ஆக 22, 2011 12:47 AM


Google News

விருதுநகர் : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு, கோ-ஆப் டெக்ஸ் தர வேண்டிய பாக்கித் தொகை, அரசு வழங்கினால் தான் தர முடியும் என, கை விரித்ததால் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவித்து வருகின்றன.

தமிழகத்தில், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இலவச வேட்டி, சேலை, பள்ளிச் சீருடைகளை உற்பத்தி செய்து வருகின்றன. இதற்கு, கோ-ஆப் டெக்ஸ் நூல் கொள்முதல் செய்து தருகிறது. கூட்டுறவு வங்கிகளில், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், காசுக் கடன் பெற்று கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி கொடுத்து, இலவச வேட்டி, சேலைகள் நெசவு செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்பட்டுள்ள வேட்டி, சேலை ரகங்களை, தரப்பரிசோதனை செய்து, கோ-ஆப் டெக்ஸ் நிர்வாகமே கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும், 60 க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, கோ-ஆப் டெக்ஸ் தரப்பில், 4.50 கோடி ரூபாய் பாக்கித் தொகை வழங்க வேண்டியது உள்ளது.



இது குறித்து, கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் கிடைக்காத நிலையில், நெசவாளர்களுக்கு கூலித்தொகையும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற காசுக் கடன்களை, திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன. காசுக் கடன்களுக்கு, வட்டித்தொகை அதிகரித்து வருகிறது. இந் நிலையில், கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமோ, எங்களுக்கு அரசிடமிருந்து பணம் வரவில்லை, வந்தவுடன் பணம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், இலவச வேட்டி,சேலை, சீருடை உற்பத்தியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து, கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us