Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னர் பதவியேற்பு

ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னர் பதவியேற்பு

ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னர் பதவியேற்பு

ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னர் பதவியேற்பு

ADDED : செப் 04, 2011 03:07 PM


Google News
ராஞ்சி: ஜார்க்‌கண்ட் மாநில கவர்னராக சையத் அகமது நேற்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 8-வது கவர்னாராக தற்போதுள்ள எம்.ஓ.எச்.பரூக்கி ‌,கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காலியாக உள்ள ஜார்க்கண்ட் மாநில கவர்னராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சையத் அகமது நியமிக்கப்பட்டார். இதற்கான பதவியேற்புவிழா ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் நடந்தது. ஜார்க்கண்ட் நீதிபதி பி.சி.டாட்டியா அவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார். இதில் முதல்வர் அர்ஜூன்முண்டா, துணை முதல்வர் சுதேஷ் மகாட்டோ, ஹேமந்த்சோரன் , சபாநாயகர் சி.பி.சிங் மற்றும், மத்திய அமைச்சர் சுபோத்காந்த் ஷகாய், எதிர்கட்சித் தலைவர்கள் பாபுலால்மாராண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சையதுஅகமது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மும்பை நக்பாடா தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். எழுத்தாளராக இவர் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us