PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

கபடி என்றால் கவிதா!
காமன் வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய கபடி அணியை வெற்றி பெறச் செய்த தமிழ்ப்பெண் கவிதா: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பக்கத்துல, சேக்காடு பகுதியில் வசிக்கிறேன். என் கூட பிறந்தவங்க ஐந்து பேரும், பெண் குழந்தைகள்; கடைக்குட்டி நான். எங்க வீட்டில், ஆண் வாரிசு இல்லாததால, என் பெற்றோர் என்னை, ஆண் பிள்ளை போல வளர்த்தனர் . ஆறாம் வகுப்பு படிக்கும் போதே,'அத்லெட்டிக் ப்ளேயர்!' பின், கபடி போட்டிகளில் கவனம் செலுத்தினேன். என் விளையாட்டு ஆர்வத்தை, பெற்றோர், ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, குஜராத் நேஷனல் கபடி போட்டியில், தமிழக அணி வென்றது தான் என் முதல் துவக்கம். 2007, 2008ல், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்றோம். 2009ல், டாக்கா தெற்காசிய கபடிப் போட்டியில் கேப்டனாக இருந்து வெற்றி பெறச் செய்தேன். ஆசியப் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி என, எங்கு சென்றாலும் பதங்கங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. கடந்த, 2005ல், காவல் துறையில் சேர்ந்தேன். தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் பணி. எனக்கு பின்னால் கபடி விளையாட வரும் வீரர்கள், வீராங்கனைகள் யாராக இருந்தாலும், என்னை போல சாதிக்கணும் என்பதற்காக, சர்வதேச தரத்தில் கபடி விளையாட்டு அகடமியை நிறுவும் எண்ணம் உள்ளது. தற்போது, அடுத்தாண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். என் ஒரே கவலை, என் வெற்றியை பார்க்க அம்மா இல்லையே என்பது தான். நான் பெறும் பாராட்டுக்களும், பதங்கங்களும், என் அம்மாவுக்கே சமர்ப்பணம்.


