ரேஷன் கடைகளில் 4, 233 பேர் நியமனம்
ரேஷன் கடைகளில் 4, 233 பேர் நியமனம்
ரேஷன் கடைகளில் 4, 233 பேர் நியமனம்
ADDED : ஆக 13, 2011 01:21 AM
சென்னை : ''ரேஷன் கடைகளில் காலியாக உள்ள இடங்களில் விரைவில், 4, 233 பேர் நியமனம் செய்யப்படுவர்,'' என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தர்ராஜன் பேசும்போது,'பல ரேஷன் கடைகளில், ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதற்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ பதிலளித்து கூறும்போது,'ரேஷன் கடைகளில், 4, 233 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன' என்று தெரிவித்தார்.


