Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மிகப்பெரிய தாக்குதலுக்கு ஒத்திகை: நரேந்திர மோடி

மிகப்பெரிய தாக்குதலுக்கு ஒத்திகை: நரேந்திர மோடி

மிகப்பெரிய தாக்குதலுக்கு ஒத்திகை: நரேந்திர மோடி

மிகப்பெரிய தாக்குதலுக்கு ஒத்திகை: நரேந்திர மோடி

ADDED : ஜூலை 14, 2011 02:46 AM


Google News

காந்திநகர்: மும்பையில் நேற்று நடந்த வெடிகுண்டு சம்பவம் நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை என கருதப்படுகிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு நாட்டிற்கு நிகழ்ந்த பேரிழப்பு. இந்த தாக்கதல் ஒரு சிறிய அளவு தான்.இனி வருங்காலத்தில் மிகப்பெரிய தாக்குதல்நடத்துவதற்கான ஒத்திகையாக தான் இந்த கு்ண்டுவெடிப்பு சம்பவம் காட்டுகிறது. நாட்டில் பயங்கரவாதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் ‌தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ,தற்போது நிலவும் சூழ்நிலையை பார்த்து இன்னும் பயங்கரவாதம் ‌கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேணடும். நேற்று நடந்த சம்பவம் நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை தான் . இனியும் தாக்குதல் தொடர்ந்தால், நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து பயங்கரவாதத்தினை வேர் அறுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us