ADDED : ஆக 21, 2011 11:38 PM
திருப்பூர் : செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
டாக்டர்
ரவிச்சந்திரன், குறும்பட இயக்குனர் தாண்டவக்கோன் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக பங்கேற்றனர்.பள்ளி தாளாளர் கண்ணம்மாள், சேர்மன்
செந்தில்குமரன், ஸ்ரீகுமரன் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் செல்வி, வினு
உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் பங்கஜம் தலைமை வகித்தார்.டாக்டர்
ரவிச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினர்கள், புறாக்களை பறக்க விட்டு,
விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.தாளாளர் கண்ணம்மாள் விளையாட்டு
போட்டிக்கான, ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். மாணவர் பார்லிமென்ட் பிரசிடென்ட்
விக்னேஷ் பெற்றுக்கொண்டு, ஓடுதள பாதையில் ஓடி, மாணவர் தலைவர் தர்மராஜிடம்
ஒப்படைத்தார். அவர், மாணவர் பேரவை விளையாட்டு துறை அமைச்சர்
காமகோடீஸ்வரனிடம் வழங்கினார். அதன்பின், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு,
மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து, 'மாஸ்டிரில்' எனப்படும் கண்கவர்
உடற்பயிற்சி வண்ண உடையணிந்த மாணவர்களாக நடத்தப்பட்டது. மாணவர்கள் கலை
நிகழ்ச்சி, தேச பக்தி பாடலுக்கு நடன நிகழ்ச்சி, எட்டாம் வகுப்பு மாணவி
அஷஸ்ரீயின் சுதந்திர தின இந்தி உரை, ஸ்ரீநிதி, மோனிகா ஆகியோரின் தேச பக்தி
பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.


