/உள்ளூர் செய்திகள்/திருச்சி/2012ம் ஆண்டில் 33,199 டன் மின் கழிவு அபாயம் : சுற்றுச்சூழல் ஆய்வாளர் "திடுக்' தகவல்2012ம் ஆண்டில் 33,199 டன் மின் கழிவு அபாயம் : சுற்றுச்சூழல் ஆய்வாளர் "திடுக்' தகவல்
2012ம் ஆண்டில் 33,199 டன் மின் கழிவு அபாயம் : சுற்றுச்சூழல் ஆய்வாளர் "திடுக்' தகவல்
2012ம் ஆண்டில் 33,199 டன் மின் கழிவு அபாயம் : சுற்றுச்சூழல் ஆய்வாளர் "திடுக்' தகவல்
2012ம் ஆண்டில் 33,199 டன் மின் கழிவு அபாயம் : சுற்றுச்சூழல் ஆய்வாளர் "திடுக்' தகவல்
ADDED : ஆக 25, 2011 01:52 AM
திருச்சி: ''எதிர்வரும் 2012ல் 33 ஆயிரத்து 199 டன் மின் கழிவு வெளியாகும் அபாயம் உள்ளது,'' என சுற்றுச்சூழல் கருத்தரங்கில் என்விரான்மென்ட் சொல்யூஷன் அமைப்பாளர் அருள் செந்தில்ராம் பேசினார்.
திருச்சி கலையரங்கத்தில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
என்விரான்மென்ட் சொல்யூஷன் அமைப்பாளர் அருள் செந்தில்ராம் முன்னிலை வகித்தார். தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மற்றும் செயலாளர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: கடந்த காலத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை முறை அமைந்திருந்தது. தற்போது முற்றிலும் இந்த நிலை மாறி விட்டது. தொழிற்சாலைகளும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும் பெருகி விட்டன. சுற்றுச்சூழலை பாதிக்கும் வழிகளை கண்டறிந்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் நச்சு தன்மையை உருவாக்கும் எந்த பொருளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒதுக்கித்தள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தோடு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.
கருத்தரங்கை ஏற்பாடு செய்த என்விரான்மென்ட் சொல்யூஷன் அமைப்பாளர் அருள் செந்தில்ராம் பேசியதாவது: அவசரமான உலகில் உயர்தொழில் நுட்பம் கொண்ட ஐபாட் டிஜிடல் கேமரா, மொபைல்ஃபோன், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இப்பொருள்களின் பயன்பாட்டுக்கு பின்னால், பெரும் மின்னணு கழிவு ஆபத்து காத்திருக்கிறது. மின்கழிவுகளால் உலக அளவில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஈயம், காட்மியம், பெரிலியம் மற்றும் தீப்பிடிக்காமல் இருக்க பொருள்களின் மீது பூசப்படும் புரோமின் பூச்சு போன்ற நச்சு நிறைந்த கன உலோகங்களில் மின் கழிவுகள் மிகுதியாக உள்ளன. இந்த மின்னணு கழிவுகளை கவனமாக கையாள வேண்டும்.
தொழிலாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு நேராத வகையில் பாதுகாப்பான முறையில் மின்னணு கழிவுகதள கையாள வேண்டியது அவசியம். அதோடு வீட்டு உபயோக பொருள்களான குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மைக்ரோவேவ் அடுப்புகளிலும் மின்கழிவு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது எல்லா வழிகளிலும் வேறு வேறு வடிவில் உருவாகி வருவதை கண்டறிந்து தடுக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொண்டதில் 2010ல் 25 ஆயிரத்து 754 டன், 2011ல் 28 ஆயிரத்து 179 டன், 2012ல் 33 ஆயிரத்து 199 டன் மின் கழிவு வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


