ADDED : செப் 16, 2011 12:05 AM
ஓசூர்: ஓசூரில் நோய் கொடுமையால் திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர் காந்தி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதம் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குணமடையவில்லை. மனமுடைந்த ஜெயலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.


