/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தப்பியோடிய விசாரணை கைதி சுற்றிவளைப்புதப்பியோடிய விசாரணை கைதி சுற்றிவளைப்பு
தப்பியோடிய விசாரணை கைதி சுற்றிவளைப்பு
தப்பியோடிய விசாரணை கைதி சுற்றிவளைப்பு
தப்பியோடிய விசாரணை கைதி சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 13, 2011 11:11 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திலிருந்து, தப்பியோடிய விசாரணைக் கைதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.சுங்குவார்சத்திரம் அடுத்த, பள்ளமொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்ராஜ், 25.
பைக் திருடன். இவர் மீது காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ராம்ராஜை பிடித்து விசாரித்தனர். கடந்த 1ம் தேதி பகல் 2 மணிக்கு போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றார்.
போலீசார் ராம்ராஜை தேடிவந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு இருங்காட்டுக்கோட்டை தொடக்கப்பள்ளி மொட்ட மாடியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று ராம்ராஜை சுற்றிவளைத்து கைது செய்தனர்.


