ADDED : ஜூலை 23, 2011 10:03 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வளரிளம் பெண்களுக்கான வாழ்க்கை கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அவார்டு டிரஸ்ட் இயக்குநர் சின்னமருது வரவேற்றார். ஆற்றாமையாளர்கள் அருள்தாஸ், குணசீலன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸிலின் லியோனாரா பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் நன்றி கூறினார்.


