Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"பாட புத்தக அட்டை பணியை விரைவுபடுத்த வேண்டும்'

"பாட புத்தக அட்டை பணியை விரைவுபடுத்த வேண்டும்'

"பாட புத்தக அட்டை பணியை விரைவுபடுத்த வேண்டும்'

"பாட புத்தக அட்டை பணியை விரைவுபடுத்த வேண்டும்'

ADDED : செப் 08, 2011 02:00 AM


Google News

பொள்ளாச்சி : 'சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் பாட அட்டைகள் தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்' என, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பாட அட்டைகள் தயாரிப்பது குறித்து எஸ்.எஸ்.ஏ., சார்பில் 'எஜூசாட்' முறையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.ஏ., மூலம் பாடம் கற்பிக்க புதிய பாட அட்டைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இப்பணி பல ஒன்றியங்களில் நிறைவு பெறாமல் உள்ளது. இது குறித்து ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார வள மையத்தில் நடந்தது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். தெற்கு ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில இணை இயக்குனர் லதா பேசியதாவது: சமச்சீர் கல்வி முறையில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் கீழ் எளிமையான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும். கலைக்கல்வி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட திட்டம்படி அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும். பாட அட்டைகள் விரைவில் தயாரிக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள், மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாட அட்டைகள் தயாரிக்கும் பணி நிறைவு செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில், மாநில பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மாலதி உட்பட பலர் பங்கேற்றனர். உடுமலை: உடுமலை குடிமங்கலம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படி, செயல்வழி கற்றல் அட்டைகள் மற்றும் படைப்பாற்றல் முறையில் பாடத்திட்டம் தயாரிப்பது குறித்து கருத்தாளர்களுக்கு எஜூசாட் மூலம் விளக்கப்பட்டது.

அரசுப்பள்ளிகளில், தொடக்கப்பள்ளிகளில், செயல்வழி கற்றல் முறையும், நடுநிலைப்பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சமச்சீர் கல்வி பாடபுத்தகம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றாற் போன்று செயல் வழி கற்றல் அட்டைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காகவும், படைப்பாற்றல் கல்வி முறையில் பாடத் திட்டம் தயாரிப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில், குடிமங்கலம் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வரும் 10ம் தேதி பணிமனை பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளுக்கு 4 மையங்களிலும், நடுநிலைப்பள்ளிக்கு சோமவாரப்பட்டி பள்ளியிலும் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று 'எஜூசாட்' மூலமாக கருத்தாளர்களுக்கும், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு விளக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us