Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு

ADDED : செப் 13, 2011 12:21 AM


Google News

திருநெல்வேலி : நான்குநேரி அருகே ஆழ்துளைக்கிணற்றில் சிறுவன் விழுந்து இறந்த சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டம் முழுவதும் ஆழ்துளைக்கிணறுகள், கிணறுகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணம் பஞ்., கைலாசநாதபுரத்தில் கடந்த 7ம் தேதி சிறுவன் சுதர்சன் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஆழ்துளைக்கிணறுகள், கிணறுகள் அமைப்பவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயம், குடிநீர் உபயோகத்திற்கு கிணறு, ஆழ்துளைக்கிணறு அமைக்க விரும்பும் நபர்கள் 15 நாட்களுக்கு முன் தாங்கள் வசிக்கும் பகுதி மாநகராட்சி கமிஷனர், நகராட்சி கமிஷனர், டவுன் பஞ்., செயல்அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்., தலைவர், பஞ்., கிளார்க்கிற்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுபடுவோர் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். கட்டடங்கள் கட்டும் போது கிணறு அமைக்கும் இடத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். கிணறு அமைக்கும் பணி முடிந்ததும் வேலியிட்டு பாதுகாக்க வேண்டும். சுற்றிலும் 0.50 இன்ட் 0.60 மீட்டர் (தரைக்கு மேல் 0.30 மீட்டர் தரை மட்டத்திற்கு கீழ் 0.30 மீட்டர்) சிமென்ட்/கான்கிரீட்டால் தடுப்பு அமைக்க வேண்டும். ஆழ்துளைக்கிணறு அமைத்த உடன் பைப்பின் மேற்பகுதியை உறுதியான பிளேட் மூடியால் மூட வேண்டும். பி.வி.சி/இரும்பு குழாயுடன் போல்ட், நட்டுகள் வைத்து மூட வேண்டும். பம்ப் பழுதாகி விடும் பட்சத்தில் டியுப் கிணறு மூடப்படாமல் இருக்கக்கூடாது. வேலை முடிந்ததும் போதிய மண் மூலம் குழி நிரப்பப்பட வேண்டும். தூர்ந்த, பயனற்று போன ஆழ்குழாய் கிணறுகளை களிமண், மண், சிறுகற்கள் மூலம் அடிமட்டத்தில் இருந்து தரைமட்டம் வரை நிரப்ப வேண்டும். ஒரு இடத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்து பணி முடிந்ததும் பூமியின் அமைப்பு துளை போடுவதற்கு முன் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us