ADDED : ஜூலை 19, 2011 10:37 PM
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் 39 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ஏ.டி.எஸ்., நகரில் வசிப்பவர் ஜெயராஜ், கூட்டுறவு சார் பதிவாளர்; மனைவி திருமகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர். வீட்டின் பின்புற வாசல் அருகில் உள்ள அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் நகை, 31 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றான். அதிகாலை 4 மணிக்கு எழுந்த மகன் பிரகாஷ், கொள்ளை நடந்ததை அறிந்தார். டி.எஸ்.பி., நடராஜ மூர்த்தி, இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கின்றனர்.


