/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காய்கறி விதைகள் மானிய விலையில் விற்பனைகாய்கறி விதைகள் மானிய விலையில் விற்பனை
காய்கறி விதைகள் மானிய விலையில் விற்பனை
காய்கறி விதைகள் மானிய விலையில் விற்பனை
காய்கறி விதைகள் மானிய விலையில் விற்பனை
கடலூர்: கடலூர் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் வட்டார விவசாயிகள் பயன்பெரும் வகையில் ஆடிப் பட்டத்திற்காக அண்ணாமலை கத்திரி, பி.எல்.ஆர்-2 என்கறி செவந்தம்பட்டி கத்திரி மற்றும் கோ-1-பாகல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டது.மேலும், வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பவர்களுக்காக கத்திரி, கீரை, வெண்டை, சுரை, பறங்கி, பீர்க்கன், பாகல், புடலை ஆகிய எட்டுவகை காய்கறி விதைகள் கொண்ட பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.விதை வேண்டுவோர் கடலூர், செம்மண்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


