ADDED : செப் 08, 2011 05:28 PM
கோவை: 'வாய்மையும், வான்மழையும்' என்ற கவிதை நூல் வெளியிட்டு விழா மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த இவ்விழாவுக்கு, அன்னூர் பாரதி மன்ற நிறுவனர் கோபி தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் மணிவண்ணன் எழுதிய 'வாய்மையும், வான்மழையும்' என்ற நூலை தமிழ்நேயம்-தமிழ் அறிவியக்க ஆசிரியர் ஞானி வெளியிட்டார். தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவர் வேங்கிடாசலபதி பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்ட தமிழ்ச்சங்க பொருளாளர் ஆதவன், குறிஞ்சி இலக்கிய மன்ற நிறுவனர் ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் பேசினர். நூல் ஆசிரியர் மணி வண்ணன் ஏற்புரை வழங்கினார். மேட்டுப்பாளையம் தமிழ்ச் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.


