Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/குறைந்தபட்ச விலை ஏல விவசாயிகள் கோரிக்கை

குறைந்தபட்ச விலை ஏல விவசாயிகள் கோரிக்கை

குறைந்தபட்ச விலை ஏல விவசாயிகள் கோரிக்கை

குறைந்தபட்ச விலை ஏல விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஆக 18, 2011 09:25 PM


Google News
கம்பம்:ஏலக்காய்க்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு ரூ. ஆயிரம் வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஏல விவசாயிகள் கேரள அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காயின் விலை திடீர் திடீரென அதிகரிப்பதும், குறைவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு சராசரி விலையாக கிலோவிற்கு ரூ. ஆயிரத்து 400 கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது கிலோவிற்கு சராசரி விலையாக ரூ. 600 க்கும் குறைவாகவே கிடைக்கிறது.மார்க்கெட்டிற்கு அதிகமாக காய் வரத்து உள்ளதென்று வியாபாரிகளும் ஆக்ஷனர்களும் கூறியுள்ளனர்.

பம்பர் மகசூல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. வடமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்வதில் தாமதம் செய்து வருகின்றனர். ஏற்றுமதியாளர்கள் போதிய அளவிற்கு இருப்பு வைத்துள்ளனர்.ஏல விவசாயிகள் கூறியதாவது: கனமழையால் அழுகல் நோய் தாக்கியதில் மகசூல் குறைந்துள்ளது. மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக வருவது எப்படி என்பது தெரியவில்லை. சிலர் இருப்பு காய்களை பதிவதாக கூறுகின்றனர். சிலர் கவுதிமாலா காய் என்கின்றனர். உற்பத்தி செலவு, தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளது. எனவே ஏலக்காய்க்கு குறைந்தபட்ச விலையாக கிலோவிற்கு ரூ. ஆயிரம் நிர்ணயம் செய்ய கேரள அரசை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us