செயற்பொறியாளருக்கு பிரிவுபசார விழா
செயற்பொறியாளருக்கு பிரிவுபசார விழா
செயற்பொறியாளருக்கு பிரிவுபசார விழா
ADDED : ஆக 26, 2011 12:09 AM
கடலூர் : கடலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு பிரிவுபசார விழா நடந்தது.
கடலூர் பொதுப் பணித்துறை கட்டட கோட்ட செயற்பொறியாளராக பணிபுரிந்த மனோகரன் நாகப்பட்டினத்திற்கு மாறுதலாகி செல்கிறார். இதனையொட்டி கடலூரில் அவருக்கு நடந்த பிரிவுபசார விழாவில் உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், சுகுமார், சிவக்குமார், உதவி பொறியாளர்கள் கவுதமன், ரவிச்சந்திரன், கணேசன், ஊழியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.


