அன்னாவுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
அன்னாவுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
அன்னாவுக்கு ஆதரவாக கைதிகள் உண்ணாவிரதம்
ADDED : ஆக 26, 2011 10:00 PM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 100 பேர், விசாரணை கைதிகள் 83 பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதிய வேளையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல், உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர், காலை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி, அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கோஷங்கள் எழுப்பினர். ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். மாலை 3.30 மணியளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் ஊழலுக்கு எதிராக அனல் தெறிக்கும் கோஷங்கள் எழுப்பியவாறு, பேரணியாக சென்றனர்.


