Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு : போலீஸ் கமிஷனரிடம் நீதிபதி வற்புறுத்தல்

லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு : போலீஸ் கமிஷனரிடம் நீதிபதி வற்புறுத்தல்

லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு : போலீஸ் கமிஷனரிடம் நீதிபதி வற்புறுத்தல்

லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு : போலீஸ் கமிஷனரிடம் நீதிபதி வற்புறுத்தல்

ADDED : ஜூலை 23, 2011 09:22 PM


Google News

பெங்களூரு:சுரங்க ஊழல் தொடர்பான அறிக்கை தயாரித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜிடம் கேட்டுக் கொண்டார்.கர்நாடக சுரங்க ஊழல் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியை, தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, ஒரு மணிநேரம் பேசினார்.லோக் ஆயுக்தா அறிக்கையில், முதல்வர் எடியூரப்பா மற்றும் பா.ஜ., அமைச்சர்கள் பெயர் இருப்பதால், அறிக்கை தயார் செய்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது.

அதனால், அந்த அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நீதிபதியை சந்தித்து விட்டு வெளியே வந்த போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி, ''லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பேசினோம்,'' என்று கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us