ADDED : ஜூலை 14, 2011 09:42 PM
அவிநாசி : அவிநாசியில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாமில்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.
அவிநாசி கோட்ட
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்
நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் முகாம் நடந்தது. திருப்பூர் மின் பகிர்மான
வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ஜனார்த்தனம் தலைமை வகித்தார். கோட்ட
செயற்பொறியாளர் பொன்மூர்த்தி வரவேற்றார். அவிநாசி - கைகாட்டிப்புதூர்
பொதுமக்கள் அளித்த மனுவில், 'கைகாட்டிப்புதூரில் அதிகரித்து வரும் மின்
நுகர்வால், பல இடங்களில் குறைந்தழுத்த மின்சாரம் பாய்கிறது. இரவு
நேரங்களில் குடியிருப்புகளில் மின் விளக்குகள் ஒளிர்வதில்லை. எனவே,
தற்போதுள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றி, அதிக திறனுள்ளதை நிறுவ வேண்டும்.
பி.எஸ்.சுந்தரம் வீதியில் பழுதடைந்துள்ள இரு மின் கம்பங்களையும் மாற்ற
வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.


