Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

ADDED : ஆக 06, 2011 02:12 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி இறந்தார்.

பெரம்பலூர் அருகே அய்யலூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் புழுந்தாயி (60). இவர் குரும்பலூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் உள்ள தனது பேத்தி மேகலாவை பார்ப்பதற்காக நேற்று காலை 7.30 மணியளவில் பஸ் குரும்பலூருக்கு சென்றார். இதன்பின்னர் மேகலாவின் கணவர் ரெங்கநாதன் மூலக்காடு கிராமத்திற்கு தனது எக்ஸ் எல் சூப்பர் டூவீலரில் புழுந்தாயியை அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். மூலக்காடு கிராமம் அருகே உள்ள தங்கராசு என்பவர் வயல் அருகே சென்றபோது புழுந்தாயி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த புழுந்தாயி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற புழுந்தாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us