ADDED : ஆக 06, 2011 10:49 PM
பழநி:சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன்.
டீசல் பில்டர் தயாரிப்பு
நிறுவன அலுவலர். பழநி பகுதியில், இதே நிறுவன பெயரில் போலி உபகரணங்கள்
விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்படி, திண்டுக்கல் ரோட்டில் உள்ள
கடையில் 'போலி' விற்பதை உறுதிப்படுத்தி, உரிமையாளர் அர்ச்சுனன் மீது
போலீசில் புகார் செய்தார். போலிகளை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.


