ADDED : ஆக 28, 2011 10:00 AM
புதுடில்லி : ஆகஸ்ட் 16ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே, தனது போராட்டத்தை முடித்த பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அவரது உடல்நிலை காரணமாக அவரது ராஜ்காட் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்னா ஹசாரே, ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானத்திற்கு தலைமை ஏற்றுச் சென்று ராம்லீலா மைதானத்தில் தனது 12 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


