ADDED : ஜூலை 13, 2011 03:27 AM
பவானி: சித்தோடு அருகே லாரியும், இரு கார்களும் மோதிக்கொண்டதில் இருவர்
காயமடைந்தனர்.சித்தோட்டில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு, மினி லாரி
ஒன்று பவானி ரோட்டில் திரும்பியது.
அப்போது, பவானி நோக்கி ஒன்றன் பின்
ஒன்றாக சென்ற இரு கார்கள், அடுத்தடுத்து லாரி மீது மோதின. காரில் வந்த
இருவர் காயமடைந்தனர். அவர்கள் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து
செல்லப்பட்டனர்.சித்தோடு எஸ்.ஐ., ராமலிங்கம் விசாரிக்கிறார்.


