ADDED : ஜூலை 14, 2011 12:29 AM
புதுச்சேரி : சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலத்த காயமடைந்து இறந்தார்.முதலியார்பேட்டையிலுள்ள கொம்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் டெய்லர் பாஸ்கரன்.
இவரது மனைவி ஜெயலலிதா, 44. இவர் கடந்த 10ம் தேதி காலை ஸ்டவ் பற்ற வைத்து சமையல் செய்த போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பிடித்துக்கொண்டது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


