ஓசூர்:ஓசூர் அடுத்த கோனேரிப்பள்ளி பி.எம்.சி., டெக் இன்ஜினிரிங்
கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை,
பி.எம்.சி., டெக் இன்ஜியனிரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை
சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கல்லூரி செயலாளர் குமார் தலைமை வகித்து
முகாமை துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் சேதுராமன் வரவேற்றார்.டாக்டர்
சீமா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்தனர்.
சமூக சேவகர் பீனா, கவுன்சிலர் குருநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், 116 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.


