/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனுதேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு
தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு
தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு
தேசிய விருதாளர் கூட்டமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 15, 2011 01:07 AM
புதுச்சேரி : இளைஞர் கொள்கையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, தேசிய விருதாளர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
கூட்டமைப்பு நிர்வாகிகள், இளைஞர் நலத்துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் அளித்துள்ள மனு: இளைஞர் கொள்கையை, திருத்தம் செய்து வெளியிட வேண்டும். சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களைத் தேர்வு செய்து, விவேகானந்தர் பெயரில் விருது வழங்கவேண்டும்.
தேசிய இளைஞர் மற்றும் குழந்தை விருது பெற்றவர்களை, மாநில அரசு சார்பில் கவுரவப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போல, விருது பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, சுய தொழில் செய்ய கடனுதவி, பஸ் மற்றும் ரயிலில் செல்ல இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.


