ஏழுசுனை கண்மாய் சீரமைக்க கோரிக்கை
ஏழுசுனை கண்மாய் சீரமைக்க கோரிக்கை
ஏழுசுனை கண்மாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 09, 2011 11:27 PM
ஆண்டிபட்டி : புள்ளிமான்கோம்பை ஊராட்சி தர்மத்துப்பட்டி ஏழுசுனை கண்மாய் மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
அருகில் உள்ள கரட்டுப்பகுதியில் இருந்து வரும் நீர் கண்மாயில் தேங்கி நிற்கும். கண்மாயில் நீர் நிரம்பினால் 50 ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீரால் பாசன வசதி பெருகும். கண்மாயில் மதகுகள் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் மழை காலங்களில் தேங்கும் நீர் வீணாகி ஆற்றில் கலந்து விடுகிறது. கண்மாயை சீரமைக்க இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.


