வறுமைக் கோட்டினருக்கு குடிநீர் குழாய் இணைப்பு
வறுமைக் கோட்டினருக்கு குடிநீர் குழாய் இணைப்பு
வறுமைக் கோட்டினருக்கு குடிநீர் குழாய் இணைப்பு
ADDED : செப் 01, 2011 11:32 PM

கம்பம் : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
நகராட்சிகளில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் உள்ளது. இதில் வீட்டு குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியில் பகிர்மான குழாய் பதிக்கப்படா விட்டாலும், குடிநீர் இணைப்பு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படாது. இருப்பினும் இதற்கான எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. ஒவ்வொரு நகராட்சியிலும், இதன்படி நூற்றுக்கணக்கான குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டியிருக்கும், என்றனர்.


