/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி விரிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் முருகவேல் உறுதிபாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி விரிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் முருகவேல் உறுதி
பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி விரிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் முருகவேல் உறுதி
பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி விரிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் முருகவேல் உறுதி
பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி விரிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் முருகவேல் உறுதி
ADDED : அக் 06, 2011 04:12 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 71வது வார்டு(பாலரெங்காபுரம்) தி.மு.க.,
வேட்பாளர் ஆர்.முருகவேல், 2001 -06 வரை இந்த வார்டு கவுன்சிலராக இருந்தவர்.
2006-11 வரை இவரது மனைவி ஈஸ்வரி கவுன்சிலராக இருந்தார்.
முருகவேல்
கூறியதாவது : பத்தாண்டுகளாக நானும், எனது மனைவியும் செய்த பணிகளால் இந்த
வார்டில் எந்த குறைபாடும் இல்லை. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.
பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.,
ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட 'டிவி', காஸ் அடுப்பு போன்றவை தடையின்றி
வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் பாலரெங்காபுரம் அரசு ஆஸ்பத்திரியை அனைத்து
தரப்பு மக்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ப போதுமான மருத்துவ, அடிப்படை
வசதிகளுடன் புதுப்பிக்கப்படும். சி.எம்.ஆர்., ரோட்டில் உள்ள மாநகராட்சி
ஜோசப் பார்க் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குரியதாக
மாற்றப்படும். மேலஅனுப்பானடி செல்லும் வழியில் உள்ள கேட்லாக் ரோட்டில்
காலியாக உள்ள இடத்தில் வணிகவளாகங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.
ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு
செய்யப்படும். பொதுபிரச்னைகளை தீர்க்க எந்த நேரமும் என்னை தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.


