/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைதுபோனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைது
போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைது
போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைது
போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூலை 28, 2011 10:05 PM
கோவை : மொபைல் போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த
ஆசாமி கைது செய்யப்பட்டான்.
குனியமுத்தூர், ராஜீவ் நகரைச் சேர்ந்த
ராமசாமியின் மகன் வடிவேல்குமார் (28); கால்டாக்ஸி டிரைவர். கடந்த சில
நாட்களாக இவரது மொபைல் போனுக்கு அழைப்பு விடுக்கும் மர்ம நபர், தகாத, ஆபாச
வார்த்தைகளால் பேசுவதாகவும், குடும்பப் பெண்களுக்கு கொலை மிரட்டல்
விடுத்தும் வந்தானாம். தொடர்ந்து வந்த மிரட்டல், ஆபாச பேச்சு இவற்றை
தடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடிவேல்குமார்,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரியிடம் புகார் கொடுத்தார். கமிஷனர்
உத்தரவுப்படி, மாநகர மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் சைபர் க்ரைம்
விசாரணைக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டதில், கணுவாய் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் கைது செய்யப்பட்டான்.
விசாரணைக்குப் பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். ''இனிமேலும், மொபைல் போனில் ஆண், பெண்களிடம் ஆபாசமாக
பேசினாலோ, எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி
எச்சரிக்கை விடுத்தார்.


