Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை

மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை

மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை

மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை

ADDED : செப் 08, 2011 02:25 AM


Google News
கெங்கவல்லி: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை மேற்கொள்ளாமல், கெங்கவல்லி அரசு மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தம்மம்பட்டி பேரூராட்சி, 1வது வார்டு மாரியம்கோவில் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹுமான் (35). அவர், நாகப்பட்டினம் பகுதியில் தங்கி, ஹோட்டலில் கூலி வேலை செய்துள்ளார்.அங்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால், தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் தம்மம்பட்டிக்கு திரும்பிய அப்துல் ரஹுமான், தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு, சர்க்கரை நோய்க்கான ஊசி இல்லை எனக்கூறி, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், அப்துல் ரஹுமானை பரிசோதனை செய்த மருத்துவர், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி நோயாளியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ள வந்த நோயாளி ஒருவரை, அரசு மருத்துவர்கள், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் செல்லும்படி சீட்டு எழுதி திருப்பி அனுப்பி வருவதால், நோயாளி சிரமத்துக்குள்ளாகி வருகிறார்.

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், வார தினங்களில் வெள்ளிக்கிழமை தோறும், சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவம் பார்க்கப்படும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகளை, மருத்துவர்கள் திருப்பி அனுப்புவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us