'அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களும் குறிப்பிட்ட அளவில், வர்ணத்தில், குறிப்பிட்ட எழுத்து அளவில் எழுத வேண்டும்' என, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதை மீறி, நம்பர் பிளேட்களில் பெயர், படங்கள், ஓவியம், கட்சிக்கொடி, தலைவர் படங்கள், எச்சரிக்கை வாசகம், தத்துவங்கள் போன்றவை எழுதினால், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தை முடக்கி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான விளம்பர பலகைகள் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்பட ஈரோடு நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான்கு வாரமாக, ஈரோடு மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் பலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் கூறியதாவது: வாகன ஆய்வில், ஒரு கார், எட்டு டூவீலர்கள் சிக்கின. இதில், இரண்டு வாகனம் மட்டுமே நம்பர் பிளேட் விதிமுறையை மீறியதால், வாகன உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். நம்பர் பிளேட் உட்பட விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே எஃப்.சி., வழங்கப்படும். புதிதாக பதிவு எண் பெற வரும் அனைத்து வாகனங்களிலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வரும்போதே, 'டி.என்.33 ஏயூ' என எழுதி வந்தால் மட்டுமே, வாகன பதிவு எண் வழங்கப்படும். நாங்கள் புதிய பதிவு எண் வழங்கியதும், அந்த எண்ணையும் அதே வடிவில் நிரப்ப வேண்டும், என வலியுறுத்துகிறோம். இந்த விதியை நாங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்துவதால், புதிய வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
'அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களும் குறிப்பிட்ட அளவில், வர்ணத்தில், குறிப்பிட்ட எழுத்து அளவில் எழுத வேண்டும்' என, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதை மீறி, நம்பர் பிளேட்களில் பெயர், படங்கள், ஓவியம், கட்சிக்கொடி, தலைவர் படங்கள், எச்சரிக்கை வாசகம், தத்துவங்கள் போன்றவை எழுதினால், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தை முடக்கி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான விளம்பர பலகைகள் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்பட ஈரோடு நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான்கு வாரமாக, ஈரோடு மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் பலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் கூறியதாவது: வாகன ஆய்வில், ஒரு கார், எட்டு டூவீலர்கள் சிக்கின. இதில், இரண்டு வாகனம் மட்டுமே நம்பர் பிளேட் விதிமுறையை மீறியதால், வாகன உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். நம்பர் பிளேட் உட்பட விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே எஃப்.சி., வழங்கப்படும். புதிதாக பதிவு எண் பெற வரும் அனைத்து வாகனங்களிலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வரும்போதே, 'டி.என்.33 ஏயூ' என எழுதி வந்தால் மட்டுமே, வாகன பதிவு எண் வழங்கப்படும். நாங்கள் புதிய பதிவு எண் வழங்கியதும், அந்த எண்ணையும் அதே வடிவில் நிரப்ப வேண்டும், என வலியுறுத்துகிறோம். இந்த விதியை நாங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்துவதால், புதிய வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.