Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/"தினமலர்' செய்தி எதிரொலி கல் குவாரிகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு

"தினமலர்' செய்தி எதிரொலி கல் குவாரிகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு

"தினமலர்' செய்தி எதிரொலி கல் குவாரிகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு

"தினமலர்' செய்தி எதிரொலி கல் குவாரிகளில் ஆர்.டி.ஓ., ஆய்வு

ADDED : செப் 03, 2011 11:05 PM


Google News

திருத்தணி : 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக, கல் குவாரிகளில் திருத்தணி ஆர்.டி.ஓ., ரவீந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில், ஆறு கல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்தக் கல் குவாரிகளில், அரசு விதித்த கால அவகாசம், பிப்ரவரி மாதம் 15 ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு, மாவட்ட கனிம வளத்துறை, மேற்கண்ட கல் குவாரிகளில் டெண்டர் விடப்படவில்லை. இதனால் சிலர், அரசு அனுமதித்த கல் குவாரிகளில், ஜல்லி மற்றும் கட்டு கற்களை திருடி வந்தனர். இது குறித்து, சென்ற மாதம் 30ம் தேதி கல் குவாரிகளுக்கு டெண்டர் விடப்படாததால், அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருத்தணி ஆர்.டி.ஓ., ரவீந்திரன், தாசில்தார் ஜெயா மற்றும் வருவாய்த் துறையினர் , கார்த்திகேயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், 'அனுமதியின்றி கல் குவாரிகளை இயக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறி எடுத்தால், குண்டர் சட்டம் பாயும்' என, ஆர்.டி.ஓ., ரவீந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us