ADDED : அக் 03, 2011 11:01 PM
மூணாறு : தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் 'பைல்கள் பூர்த்தி செய்யும் தினம்' என்ற பெய ரில் விடுமுறை நாளில் அனைவரும் பணி செய்தனர்.
தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் பைல்களை கேரளா அரசின் நூறு நாள் நிகழ்ச்சியில் உட்படுத்தி விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேவிகுளம் சப் கலெக்டர் ராஜமாணிக்கம் உத்தரவின் பேரில், விடு முறை நாளான 'பைல்கள் பூர்த்தி செய்யும் நாள்' என்ற பெயரில் அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்டது. தாசில்தார் ராதாகிருஷ்ணன்நாயர் உட்பட ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்தனர்.
ஜப்தி,பிறப்பு,இறப்பு பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தேங்கி கிடந்த 200க்கும் மேற்பட்ட பைல்கள் ஒரே நாளில், முடிக்கப்பட்டன.


