/உள்ளூர் செய்திகள்/தேனி/42 பணியிடங்கள் காலியானது : கம்பம் நகராட்சி பணி பாதிப்பு42 பணியிடங்கள் காலியானது : கம்பம் நகராட்சி பணி பாதிப்பு
42 பணியிடங்கள் காலியானது : கம்பம் நகராட்சி பணி பாதிப்பு
42 பணியிடங்கள் காலியானது : கம்பம் நகராட்சி பணி பாதிப்பு
42 பணியிடங்கள் காலியானது : கம்பம் நகராட்சி பணி பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2011 10:29 PM
கம்பம் : கம்பம் நகராட்சியில் 42 பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
33 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் பல பணியிடங்கள் காலியாகி ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்டது.
சமீபத்தில் கமிஷனர் ஓய்வு பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பர் ஆன உதவி பொறியாளர் பணியிடம் நிரப்பபடவில்லை. இளநிலை உதவியாளர் 3, டைப்பிஸ்ட் 1, அலுவலக உதவியாளர் 1, ரிக்கார்டு கிளார்க் 1 , வரி வசூல் பிரிவில் 8 , சுகாதார பிரிவில் 22 , ஆர்.சி.கைச் ஆஸ்பத்திரியில் 4 பணியிடங்கள் ஆக மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளது. மொத்த பணியாளர்களில் 42 பணியிடங்கள் அனைத்து பிரிவுகளிலும் காலியாக இருப்பதால், பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


