/உள்ளூர் செய்திகள்/சென்னை/போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு உரிமையாளர் மீது பொய் வழக்கு மோசடி பிரமுகர் கைதுபோலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு உரிமையாளர் மீது பொய் வழக்கு மோசடி பிரமுகர் கைது
போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு உரிமையாளர் மீது பொய் வழக்கு மோசடி பிரமுகர் கைது
போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு உரிமையாளர் மீது பொய் வழக்கு மோசடி பிரமுகர் கைது
போலி ஆவணம் மூலம் வீடு அபகரிப்பு உரிமையாளர் மீது பொய் வழக்கு மோசடி பிரமுகர் கைது
ADDED : ஜூலை 27, 2011 02:51 AM
சென்னை : போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்து, வீட்டின் உரிமையாளர் மீதே
வழக்கு தொடர்ந்தவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை அடையாறு, சாஸ்திரி
நகரைச் சேர்ந்தவர் பத்மா, 64.
இவருக்கு, சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில்,
சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. வியாபார விஷயமாக, கணவருடன் சிங்கப்பூர்
சென்று, அங்கேயே குடியுரிமை பெற்று தங்கினர்.பத்மாவின் தாயார் மாதவி,
இவருக்குச் சொந்தமான பங்களாவை கவனித்து வந்தார். தாயார் இறந்த பின்,
சங்கரன், 54, என்பவரை வீட்டை பராமரிப்பதற்காக வேலைக்கு
அமர்த்தினார்.இந்நிலையில், உரிமையாளர் இல்லாத நேரத்தை, சங்கரன் தனக்கு
சாதகமாக பயன்படுத்தி, படப்பிடிப்பு உட்பட பல சமூக விரோத செயல்களுக்கும்
பயன்படுத்தி வந்தார். இதையறிந்த பத்மா, சங்கரனிடம் கேட்டுள்ளார்.வீட்டில், 2
வருடங்கள் தங்கி இருக்க அனுமதி அளித்தது போல, போலியான ஆவணங்களை தயார்
செய்து, அவருக்கு எதிராகவே, ஆலந்தூர் கோர்ட்டில், சங்கரன் வழக்கு
தொடர்ந்தார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின்
பேரில், சங்கரனை கைது செய்த, நிலமோசடிப் பிரிவு போலீசார், கோர்ட்டில்
ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.