Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி பஞ்.,யூனியனில் பிரிவுபசார விழா

உடன்குடி பஞ்.,யூனியனில் பிரிவுபசார விழா

உடன்குடி பஞ்.,யூனியனில் பிரிவுபசார விழா

உடன்குடி பஞ்.,யூனியனில் பிரிவுபசார விழா

ADDED : ஜூலை 23, 2011 03:20 AM


Google News
உடன்குடி: உடன்குடி பஞ்., யூனியனில் பிரிவுபசார விழா நடந்தது.உடன்குடி பஞ்.,யூனியனில் ஏ.பி.டி.ஓ.,வாக பணியாற்றியவர் சங்கரநாராயணன்.

இவர் தற்போது புதூர் பஞ்.,யூனியனுக்கு ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பிரிவுபசார விழா பஞ்.,யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. உடன்குடி பஞ்.,யூனியன் சேர்மன் ராஜரெத்தினம் தலைமை வகித்தார். ஆணையாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ.,(திட்டம்) ரஞ்சித் வரவேற்றார். யூனியன் இன்ஜி., மாரியப்பன், குதிரைமொழி பஞ்.,தலைவர் கன்னிமுத்து, ஏ.பி.டி.ஓ.(பஞ்.,) சுடலை, உதவியாளர் பாலசுப்பிரமணியன், சீர்காட்சி பஞ்.,உதவியாளர் மாலா, குலசேகரன்பட்டணம் மக்கள் நலப்பணியாளர் பிரபாகர், அரசு காண்ட்டிராக்டர் ஜெயராமர் ஆகியோர் பேசினர். இறுதியில் முகம்மது மீரான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஏ.பி.டி.ஓ.,(நிர்வாகம்) நாகேஸ்வரி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us