Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊழியரை வசைபாடிய அலுவலர் மீது வழக்கு

ஊழியரை வசைபாடிய அலுவலர் மீது வழக்கு

ஊழியரை வசைபாடிய அலுவலர் மீது வழக்கு

ஊழியரை வசைபாடிய அலுவலர் மீது வழக்கு

ADDED : ஆக 11, 2011 10:38 PM


Google News

திண்டுக்கல் : ஊழியரை அசிங்கமாக பேசி மிரட்டியதாக, திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது.

மாவட்ட தபால் அலுவலக முன்னேற்ற சங்க மாநில செயல் தலைவர் கணேசன் (58). இவர் போலீசில் அளித்துள்ள புகாரில், 'அஞ்சல் கோ ட்ட கண்காணிப்பாளர் சட்ட விரோதமாக அலுவலகத்தில் தங்கி, ஊழியர்களை பழி வாங்கும் போக்கில் செயல்படுகிறார். ஏக வசனத்தில் பேசுவதும், பணியிட மாற்றம், சஸ்பெண்ட் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை சங்கத்தின் மூலம் அணுகிய போது, தரக்குறைவாக பேசி, ஆட்களை வைத்து தாக்குவதாக மிரட்டினார். பொய்யான கடிதம் மூலம் நான் ஒய்வு பெறும் நாளில் என்னை சஸ்பெண்ட் செய்து, என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்,' என, கூறப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us