ADDED : செப் 24, 2011 09:34 PM
நியூயார்க் : 2ஜி விவகாரம் தொடர்பாக, தனது அமைச்சர்கள் மீது முழு ஆதரவு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, . இந்த விவகாரத்தில், <உண்மை நிலையை ஆராயாமல் அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்வதே எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2ஜி விவகாரதத்தில், அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.


