Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனம் 4வது வார்டில் சுயேச்சை தீவிர பிரசாரம்

திண்டிவனம் 4வது வார்டில் சுயேச்சை தீவிர பிரசாரம்

திண்டிவனம் 4வது வார்டில் சுயேச்சை தீவிர பிரசாரம்

திண்டிவனம் 4வது வார்டில் சுயேச்சை தீவிர பிரசாரம்

ADDED : அக் 11, 2011 01:56 AM


Google News

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் செங்கழனி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

திண்டிவனம் முருங்கப்பாக்கம் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 7 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பி.ஏ., பட்டதாரியான செங்கழனி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். திண்டிவனம் நகரில் வேதவள்ளியம்மன் அறக்கட்டளையின் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக இலவசமாக மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு, சட்டக் கல்லூரி நுழைவுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கான தனிப்பயிற்சி ஆகிய கல்விப் பணியை நடத்தி வந்தவர் செங்கழனி. இது தவிர தனது பகுதி மக்களுக்கு திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளதால் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். இவர் வார்டு முழுவதும் வீடு, வீடாக சென்று தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us