Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேயிலை விவசாயிகளுக்கு மானியம் : வைகோ கோரிக்கை

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் : வைகோ கோரிக்கை

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் : வைகோ கோரிக்கை

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் : வைகோ கோரிக்கை

ADDED : ஆக 06, 2011 10:43 PM


Google News
Latest Tamil News

சென்னை : ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தேயிலைக்கு மட்டும், கிலோவுக்கு ரூ.2 மானியம் அறிவித்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளும், 200க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலைச் சார்ந்துள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகளில், 10 சதவீதம் பேர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேயிலை வழங்குகின்றனர். அரசின் அறிவிப்பால், இந்த 10 சதவீத விவசாயிகள் மட்டுமே பயனடைவர். கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலை தேயிலை விவசாயிகள் என அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us